தமன்னா படப்பிடிப்பை திடீரென நிறுத்த சொன்ன அமைச்சர். பெரும் பரபரப்பு..!

Mahendran

வியாழன், 14 மார்ச் 2024 (15:58 IST)
நடிகை தமன்னா நடித்த படத்தின் படப்பிடிப்பு ஒன்று மும்பை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வந்த நிலையில் திடீரெனஅமைச்சர் சொன்னதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மும்பையில் உள்ள ஜெஜெ அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்த பத்து நாட்களுக்கு மாநில சுகாதாரத்துறை இடம் அனுமதி பெற்று தமன்னா நடிக்கும் ஹிந்தி படம் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது இந்த நிலையில் அரசு மருத்துவமனைக்குள் விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்ததாக சுகாதாரத் துறை அமைச்சருக்கு தகவல் வந்ததை எடுத்து உடனடியாக மருத்துவமனை தலைமை டாக்டரை தொடர்பு கொண்டு உடனே படப்படிப்பை நிறுத்தும்படி உத்தரவிட்டார் 
 
இந்த நிலையில் சுகாதார துறையில் ஒப்புதல் கடிதத்தில் அடிப்படையில் தான் நாங்கள் படப்பிடித்து அனுமதி அளித்தோம் என்று தலைமை டாக்டர் கூறிய நிலையில் அமைச்சரின் அறிவுரையை ஏற்று படப்பிடிப்பை நிறுத்தியதாக கூறியிருந்தார் 
 
இதனை அடுத்து சுகாதாரத் துறை மற்றும் போலீசார் படப்பிடிப்பு நிறுத்தியதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் அனைத்து துறைகளிலும் தடையில்லா சான்று வாங்கி படபிடிப்பு நடத்த நிலையில் படபிடிப்பை திடீரென அனுமதிக்க முடியாது என்று கூறியிருப்பதால் இரண்டு கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்