ரொம்பவும் ஆவலா இருக்கேன் - தமன்னா

புதன், 8 பிப்ரவரி 2017 (11:51 IST)
விக்ரம் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் நாயகியாக முதலில் சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்து 15 லட்ச ரூபாய் அட்வான்ஸும் அளித்தனர்.



படப்பிடிப்பு நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் நிலையில், அப்படத்திலிருந்து சாய் பல்லவி விலக, தமன்னாவை ஒப்பந்தம் செய்தனர். ஒரு நடிகை நடிக்க மறுத்த வேடத்தில் தமன்னா. இது பற்றி அவர் என்ன சொல்கிறார்?

விக்ரமுடன் நடிக்க ரொம்பவும் ஆவலாக இருக்கேன். விஜய் சந்தர் சொன்னது மைன்ட் ப்ளோயிங் கதை. அதனால் கதையை கேட்டதும் உடனே ஒப்புக் கொண்டேன். மார்ச்சில் என்னுடைய காட்சிகள் படமாக்கப்படும் என்றார்.

நாளை மறுநாள் தொடங்கும் படப்பிடிப்பில் விக்ரம் கலந்து கொள்கிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்