தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.
இதையடுத்து பாலிவுட்டில் ஷைத்தான் மற்றும் டப்பா கார்டல் ஆகிய படங்களில் நடித்தார். இதையடுத்து சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆனார்கள். இதற்குக் காரணம் சிவகுமாருக்கும் ஜோதிகாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஜோதிகா தரப்போ, தங்கள் பெற்றோரோடு சேர்ந்து இருப்பதற்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் மும்பையில் தற்காலிகமாகக் குடியேறியதாகவும் சொல்லப்பட்டது.