சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ செகண்ட் சிங்கிள் பாடல்

திங்கள், 27 டிசம்பர் 2021 (19:40 IST)
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வரும் 4ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் 2ம் இடம் பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
 
உள்ளம் உருகுதய்யா என்று தொடங்கும் இந்த பாடலை டி இமான் கம்போஸ் செய்திருக்க யுகபாரதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலில் சூர்யா முருகன் வேடத்தில் வருவது போன்ற காட்சிகள் இருப்பதை அடுத்து அவரது தந்தை சிவகுமார் முருகன் வேடத்தில் கச்சிதமாக பொருந்தியதை போலவே சூர்யாவுக்கும் இந்த வேடம் பொருந்தியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்ற 
 
சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ் ராஜ்கிரண் சரண்யா உள்பட பலர் நடித்து உள்ளனர் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்