சுதா கொங்கராவுக்கு அனுமதி வழங்கிய சூர்யா… சிவகார்த்திகேயன் நடிப்பில் புறநானூறு உறுதி!

vinoth

சனி, 20 ஜூலை 2024 (10:02 IST)
சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் இயக்கினார் சுதா கொங்கரா. அந்த படம் ரிலீஸாகி அட்டர் ப்ளாப் ஆனது. இந்நிலையில்  மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்பட்டது.

படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புற்நானூறு படத்தின் கதையை படமாக்கிக் கொள்ள சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதாம். இதனால் சிவகார்த்திகேயனை வைத்து சுதா கொங்கரா இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்