சூர்யா 44 படத்தின் தலைப்பு இதுதானா?... ஓ அதனால்தான் அந்தமானில் ஷூட்டிங்கா?

vinoth

செவ்வாய், 16 ஜூலை 2024 (17:20 IST)
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

வில்லனாக உறியடி விஜயகுமார் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் ஜோஜு ஜார்ஜ், நவீன் சந்திரா, டாணாக்காரன் தமிழ் மற்றும் நாராயணன் ஆகியோரும் நடிக்கின்றனர். கார்த்திக் சுப்பராஜின் மற்ற படங்களைப் போலவே இந்த படமும் ஒரு கேங்ஸ்டர் கதைதான் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது ஒரு பீரியட் படமாக உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு ‘சிறை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால்தான் அந்தமானில் படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சூர்யா பிறந்தநாளன்று இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படலாம் என சொலல்ப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்