பாம்புகளால் அந்தமான் ஷூட்டிங்கை முன்கூட்டியே முடித்த ‘சூர்யா 44’ படக்குழு...!

vinoth

செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (08:15 IST)
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் ‘சூர்யா 44’ எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக அந்தமான் தீவுகளில் நடந்தது. அங்கு கிட்டத்தட்ட 40 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு முன்பாகவே ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பியது படக்குழு. அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்தமானில் அவர்கள் ஷூட்டிங் நடத்திய இடங்களில் அதிகளவு பாம்புகள் வருகை இருந்ததால் படக்குழு பயந்து பயந்து காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதற்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த பின்னரும் பாம்புகளை கட்டுப்படுத்த முடியாததால் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே ஷூட்டிங்கை முடித்து படக்குழு திரும்பிவிட்டனராம். மீதமுள்ள காட்சிகளை ஊட்டியில் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்