மீண்டும் நடிகராகும் சுந்தர் சி! இயக்குனர் இவர்தானாம்!

செவ்வாய், 22 ஜூன் 2021 (13:38 IST)
இயக்குனர் சுந்தர் சி மீண்டும் நடிகராக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

சென்னை 28 படத்தில் நடித்தவர்களில் கதாநாயகனாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டவர் ஜெய். அவர் நடித்த சுப்ரமண்யபுரம் உள்ளிட்ட பல படங்கள் ஹிட்டான நிலையில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அவர் விட்டதால் இப்போது சுத்தமாக வாய்ப்புகள் இல்லாத நிலையில் உள்ளார். அதனால் இப்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். அதைத் தவிர்த்து சுசீந்தரன் இயக்கும் இரண்டு படங்கள் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. இதனால் இப்போது இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு வில்லனாக நடிக்க ஜெய் சம்மதித்துள்ளாராம். இந்த படத்தை சுந்தர் சியே தயாரிக்கும் நிலையில் அவரின் உதவியாளர் பத்ரி இயக்க உள்ளார். இவர் சுந்தர் சி இயக்கிய பல படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த சுந்தர் சி ஒரு கட்டத்தில் வரிசையாக ப்ளாப் படங்கள் கொடுக்க நடிப்பை விட்டு விலகி இயக்கத்தில் ரி எண்ட்ரி கொடுத்தார். இப்போது மீண்டும் அவருக்கு நடிப்பு ஆசை ஏற்பட்டுள்ளதால் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்