சிம்புவுக்கு தொடங்கிய சிக்கல்… கொரோனா குமார் பஞ்சாயத்தை இழுத்த ஐசரி கணேஷ்!

வியாழன், 8 ஜூன் 2023 (07:59 IST)
சிம்புவின் சினிமா கிராஃப் மாநாடு படத்துக்கு பிறகு மேல்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாக சிம்பு இப்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தைத் தொடங்குவதில் இப்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. முன்னதாக ஐசரி கணேஷிடம் தொடர்ந்து 3 படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தை போட்டிருந்தார் சிம்பு. அதன்படி ஒரு படத்தில் மட்டுமே நடித்து முடித்துள்ளார். அடுத்த படத்தில் நடிப்பதற்குள் இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நடிக்க சென்றுவிட்டார். அதனால் தங்கள் கம்பெனிக்கு முடித்துக் கொடுக்காமல் வேறு கம்பெனி படத்தில் நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தைக் கொடுத்துள்ளாராம்.

இது சம்மந்தமாக தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பஞ்சாயத்தில் இரண்டு நாட்கள் சிம்பு கொரோனா குமார் ஷூட்டிங்கில் கலந்து கொண்டதாகவும், அதனால் அந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுதான் அடுத்த படத்தில் அவர் நடிக்க வேண்டும் என ஐசரி கணேஷ் சார்பாக சொல்லப்பட்டதாம். அதற்கு தயாரிப்பாளர் சங்கமும் ஒத்துக்கொண்டுள்ளதால் சிம்பு தரப்புக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதனால் சிம்பு அடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்துதான் சிம்பு தேசிங் பெரியசாமி படம் தொடங்கப்படுவது எப்போது என தெரியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்