விடுதலை படத்துக்கு பிறகு மீண்டும் வெற்றிமாறனோடு ஒரு படம்… சூரி கொடுத்த அப்டேட்!

vinoth

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (17:23 IST)
கூழாங்கல் படத்தின் மூலம் நம்பிக்கைக் கொடுத்த இயக்குனர் பி எஸ் வினோத்ராஜ், தன்னுடைய இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.

கடந்த ஆண்டு முதல் விடுதலை, கருடன் மற்றும் கொட்டுக்காளி என குறிப்பிடத்தகுந்த படங்கள் மூலமாக கவனம் ஈர்த்து வரும் சூரி, அடுத்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இன்று கொட்டுக்காளி பட ரிலீஸையொட்டி, தியேட்டர்களுக்கு சென்று பார்வையிட்ட சூரி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது “விடுதலை படத்துக்குப் பிறகு மீண்டும் அண்ணன் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன். விரைவில் மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்