சினேகா மகளை பார்த்திருக்கீங்களா? முதல் முறையாக வெளியான புகைப்படம்!

வெள்ளி, 31 ஜூலை 2020 (10:33 IST)
தென்னிந்திய சினிமாவின் சிரிப்பழகி சினேகா கடந்த 2001 ம் ஆண்டு வெளியான "என்னவளே" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். வசீகரா, ஆட்டோ கிராப் , பார்த்தாலே பரவசம், ஏப்ரல் மாதத்தில் , உன்னை நினைத்து , ஹரிதாஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். தமிழ் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக பேசப்பட்டார்.

இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 2015ல் இவர்களுக்கு பிரசன்னா விஹான் என்ற மகன் பிறந்தார். பின்னர் குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி னார். அதையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை குழந்தை பிறந்தது.


மகளுக்கு ஆத்யந்தா என பெயர் வைத்துள்ளனர். ஆத்யந்தா என்றால் ஆதியும் அந்தமும் அற்றவள், முதலும் முடிவும் இல்லாதவள் Forever என்பது அர்த்தம் என பிரசன்னா பேட்டி ஒன்றில் கூறினார். இந்நிலையில் தற்ப்போது ஸ்னேகா மகளின் புகைப்படம் முதன்முறையாக சமூகவலைத்தளத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இருந்தும் முகம் தெரியாத இந்த புகைப்படம் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்