சிவகார்த்திகேயனின் தெலுங்கு படம்… சம்பள பேச்சுவார்த்தையில் இழுபறி!

செவ்வாய், 20 ஜூலை 2021 (10:19 IST)
சிவகார்த்திகேயனின் தெலுங்கு படத்துக்கான சம்பள பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்றும் அவர் தற்போது அயலான் மற்றும் டாம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்கயிருப்பது பிரபல தெலுங்கு இயக்குனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான தெலுங்கு திரைப்படம் ’ஜாதி ரட்னலு’. இந்த திரைப்படத்தை இயக்கிய அனுதீப்  என்பவர்தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் மிகப்பெரிய தொகையான 30 கோடி ரூபாய் கேட்டுள்ளாராம். தயாரிப்பு நிறுவனம் 27 கோடி ரூபாய் வரை தர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இது சம்மந்தமான பேச்சுவார்த்தை இப்போது நடந்து கொண்டிருக்கிறதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்