கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.
மற்றொரு முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பிஜு மேனன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார், இவர் ஏற்கனவே தமிழில் தம்பி, போர்க்களம் மற்றும் அரசாங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழில் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.