பராசக்தி படத்தால் சிவகார்த்திகேயன்& முருகதாஸ் படத்துக்கு வந்த சிக்கல்!

vinoth

வியாழன், 13 பிப்ரவரி 2025 (12:43 IST)
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்யலாம் எனப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் மற்றொரு படமான ‘பராசக்தி’யைக் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் பரவுவதால் இப்போது SK 23 படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியைக் குறிவைப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்