சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!

சனி, 17 டிசம்பர் 2022 (17:47 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பின் போது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் மோதல் உச்சத்தை எட்டி படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பும் சமாதானமாகி படப்பிடிப்பை தொடங்கினர்.

இதையடுத்து இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக ஹாலிவுட்டைச் சேர்ந்த யானிக் பென் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பல தமிழ் படங்களுக்கும் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாவீரன் படத்தின்  தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி அதிக விலை கொடுத்து கைப்பற்றியுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்