வட இந்தியாவில் நடக்கும் வெந்து தணிந்தது காடு ஷூட்டிங்!

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (15:10 IST)
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங் தற்போது உத்தரபிரதேசத்தில் நடப்பதாக சொல்லப்படுகிறது.

மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்துவரும் நிலையில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை சமீபத்தில் பேசி முடித்தார் சிம்பு. இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் சில விடுபட்ட காட்சிகளை இப்போது படக்குழு லக்னோவில் படமாக்கி வருகிறது. இந்த ஷூட்டிங் நான்கு நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்த காட்சிகளில் சிம்பு பங்கேறகவில்லை என்றும் சொல்ல்ப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்