ஒரு வழியாக மீண்டும் தொடங்கிய மாநாடு – பரபரப்பில் வெங்கட்பிரபு & கோ!

திங்கள், 9 நவம்பர் 2020 (17:37 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்று பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது.

நடிகர் சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களாக திண்டுக்கல்லில் நடந்து வருகிறது.இந்நிலையில் இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் மிகுந்த பாதுகாப்போடு நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்