ஒரே டேக்கில் ஓகே: ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பை முடித்த சிம்பு!

வியாழன், 5 நவம்பர் 2020 (07:47 IST)
பொதுவாக சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அவர் எவ்வளவு கடினமான காட்சிகளாக இருந்தாலும் ஒரே டேக்கில் ஓகே செய்வார் என்ற பெயரும் உள்ளது
 
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு அனைத்து காட்சிகளையும் ஒரே டேக்கில் ஓகே செய்து தற்போது அவருடைய பகுதியின் படப்பிடிப்பை முடித்து விட்டதாக கூறப்படுகிறது 
சிம்புவின் படப்பிடிப்பை 15 நாட்களுக்கு மேல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது பத்தே நாட்களில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் ஆச்சரியமடைந்தனர். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் ஈஸ்வரன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்து விட்ட சிம்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ள இருப்பதாகவும் இதற்காக அவர் அடுத்த கெட்டப்பிற்கு மாறுவதற்கு தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்