அடுத்த படத்துக்காக தற்காப்பு கலைகளைக் கற்கும் சிம்பு… இயக்குனர் இவரா?

வெள்ளி, 23 டிசம்பர் 2022 (09:07 IST)
சிம்பு பத்து தல படத்துக்குப் பிறகு தன்னுடைய அடுத்த படம் என்ன என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை.

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேல நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

இதையடுத்து சிம்பு அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கிடையில் சிம்பு, அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்துக்காக இப்போது தற்காப்பு கலை பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்பார் படத்தின் தோல்விக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்