இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது வருகிற நவம்பர் 20-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாகவும், இதற்காக பிரம்மாண்டமான விழா ஒன்றினையும் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
இந்த விழாவில் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், அக்ஷய்குமார், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், எமி ஜாக்சன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்தி திரையுலகின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கயிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.