தொடங்கியது செல்வராகவனின் சாணிக்காயிதம் படப்பிடிப்பு!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (17:37 IST)
செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் படப்பிடிப்பு இன்று திண்டுக்கல்லில் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் தான் ஒரு படத்தில் நடிக்கபோவதாக அறிவித்த போதே அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. செல்வராகவன் போன்ற தேர்ந்த இயக்குனரை தன் கதையின் மூலம் நடிக்க சம்மதிக்க வைத்த அந்த இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. அந்த இயக்குனர் இதற்கு முன்னர் ராக்கி என்ற படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்த நிலையில் இப்போது இன்று திண்டுக்கல்லில் அதன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. ஒரே கட்டமாக 40 நாட்களில் படத்தின் படப்பிடிப்பை முடிக்க உள்ளாராம் இயக்குனர் அருண்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்