சிம்புவுக்கு கதை சொல்லியுள்ள ஆர்யா விஷால் இயக்குனர்!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (17:24 IST)
நடிகர் சிம்பு இயக்குனர் ஆனந்த் ஷங்கர் சொல்லியுள்ள கதைக்கு ஓகே சொல்லி அதில் நடிக்க உள்ளாராம்.

நடிகர் சிம்பு நீண்ட நாட்களுக்குப் பின் வரிசையாக படங்களை நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மூத்த இயக்குனர்களிடம் கதையும் கேட்டு வருகிறார். இந்நிலையில் மிஷ்கின் மற்றும் ராம் ஆகியோர் அவரிடம் கதை சொல்லியுள்ளனர். இந்நிலையில் இப்போது இருமுகன் மற்றும் எனிமி ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

சமீபத்தில் அவர் சொன்ன கதை சிம்புவுக்குப் பிடித்துப் போக விரைவில் அந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்