ஓடிடியில் வெளியாகிறதா சாணிக்காயிதம்? பின்னணி என்ன!

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (16:24 IST)
சாணிக்காயிதம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இயக்குனர் செல்வராகவன் தான் ஒரு படத்தில் நடிக்கபோவதாக அறிவித்த போதே அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதையடுத்து அவரும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது. படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தபோது கொரோனா இரண்டாவது அலை வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் படம் பற்றிய அப்டேட்டுகளையும் புகைப்படங்களையும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவ்வப்போது வெளியிட்டு வந்தார். இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஓடிடி வெளியீட்டுக்கு முயற்சி நடக்கிறது. இப்போது அமேசான் ப்ரைமுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்