நான் விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினர்… சமந்தா வருத்தம்!

vinoth

வெள்ளி, 24 அக்டோபர் 2025 (09:26 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா புகழின் உச்சத்தில் இருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டதால் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டுள்ளார். தமிழில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’.

சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அவர்களின் விவாகரத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யா சக நடிகை சோபிதா துலிபாலாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் சமந்தா தற்போது வரை ‘சிங்கிள்’ ஆக இருக்கிறார். இதற்கிடையில் அவர் பேமிலி மேன் இயக்குனர் ராஜ் நிடிமோரைக் காதலிப்பதாகவும் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் சமந்தா தற்போது தன்னுடைய திரை வாழ்க்கையில் சந்தித்த ஏற்றத் தாழ்வுகள் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் என்னுடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். நான் சிக்கலில் இருந்த போது, உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட போது சிலர் கேலி செய்தனர். நான் விவாகரத்து செய்தபோது அதை சிலர் கொண்டாடினர். இதெல்லாம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது” எனக் கூறியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்