கண்ணீர் விட்டு அழுத சமந்தா

சனி, 5 மே 2018 (12:56 IST)
எமோஷனல் காட்சிகளில் நிஜமாகவே கண்ணீர் விட்டு அழுதுள்ளார் சமந்தா.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
 
சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பத்திரிகையாளர் வேடத்தில் சமந்தா நடித்துள்ளார். இதில், சமந்தாவுக்கு எமோஷனலான காட்சிகள் நிறையவே இருக்கிறதாம். சில காட்சிகளில் எமோஷனல் தாங்காமல் நிஜமாகவே கண்ணீர் விட்டு அழுதிருக்கிறாராம் சமந்தா.
தெலுங்கில் வருகிற 9ஆம் தேதியும், தமிழில் 11ஆம் தேதியும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. படம் வெளியான பிறகு தன் நடிப்பு குறித்து பேசப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சமந்தா. அவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான ‘ரங்கஸ்தலம்’ சூப்பர் ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்