நாம் இருவரும் இணைந்தால் ரூ.4,000 கோடி வசூலாகும்: சல்மான் கான் பேச்சு!

செவ்வாய், 4 அக்டோபர் 2022 (12:49 IST)
தற்போது 300 கோடி 400 கோடி வசூல் ஆகும் படத்தை பெரிதாக பேசிக் கொண்டிருக்கிறோம், ஆனால் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகம் இணைந்தால் 4000 கோடி வசூல் ஆகும் என சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
 
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த காட்பாதர் என்ற திரைப்படத்தில் சல்மான்கான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். லூசிபர் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக் படமான இந்த படத்தை மோகன் ராஜா இயக்கி உள்ளார் என்பதும் நயன்தாரா இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சல்மான்கான் பேசியபோது, ‘தற்போது பாலிவுட் படங்கள் தோல்வி அடைந்து வருகின்றன என்றும் ஆனால் தென்னிந்திய படங்கள் வெற்றி அடைந்து வருகின்றன என்றும் அதனால் நாங்கள் தென்னிந்திய நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க விரும்பி உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்கள்
 
மக்கள் ஹாலிவுட் சொல்ல விரும்பும் இந்த நேரத்தில் நாங்கள் தென் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் என்றும் தென்னிந்திய நட்சத்திரங்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் இணைந்து நடித்தால் அந்த படம் 3,000 முதல் 4,000 கோடி வசூல் செய்யும் என்றும் அவர்கள் உள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்