ரூ.25 கோடியை அடுத்து மேலும் ரூ.3 கோடி கொடுத்த பிரபல நடிகர்

வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (20:32 IST)
ரூ.25 கோடியை அடுத்து மேலும் ரூ.3 கோடி கொடுத்த பிரபல நடிகர்
கொரோனா தடுப்பு நிதியாக திரையுலக பிரபலங்கள் பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் மத்திய-மாநில அரசுக்கு அனுப்பி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக தல அஜித் அவர்கள் ரூ.1.25 கோடி, ராகவா லாரன்ஸ் அவர்கள் ரூ.3 கோடி என நிதியுதவி செய்தது குறித்து பார்த்தோம் 
 
மேலும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஏற்கனவே ரூபாய் 25 கோடி கொரோனா தடுப்பு நிதி வழங்கி இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது அவர் மேலும் ரூபாய் 3 கோடி மும்பை மாநகராட்சிக்கு அளித்துள்ளார் 
 
மும்பை மாநகராட்சியில் உள்ள மருத்துவர்களுக்கு தேவையான சாதனங்கள் வாங்கவும் மருத்துவ கருவிகள் வாங்கவும் அவர் இந்த பணத்தை அளித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ரூ.25 கோடி அக்சயகுமார் கொடுத்த நிலையில் தற்போது மேலும் 3 கோடி அவர் கொடுத்துள்ளதால் மொத்தம் ரூ.28 கொடுத்துள்ள அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்