பாலிவுட் படங்கள் இந்தியாவைத் தவறாகக் காட்டுகின்றன- ரிஷப் ஷெட்டி ஆவேசம்!

vinoth

புதன், 21 ஆகஸ்ட் 2024 (15:39 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

ஆனாலும் படத்தின் வெற்றி அனைகட்டினால் கூட தடுக்க முடியாத வெள்ளம் போல இருந்தது. இதையடுத்து ரிஷப் ஷெட்டி முன்னணி ஹீரோவானார். இப்போது அவர் இயக்கத்தில் காந்தாரா 2 உருவாகி வருகிறது. சமீபத்தில் காந்தாரா படத்துக்காக ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரிஷப் ஷெட்டி பாலிவுட் படங்கள் இந்தியாவை தவறாக சித்தரிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் அவர் “கலைப்படங்கள் என்ற பெயரில் பாலிவுட் படங்கள் சர்வதேச விழாக்களில் காட்டப்பட்டு கவனம் பெறுகின்றன. என்னைப் பொருத்தவரை என் நாடு, என் மாநிலம் மற்றும் என் மொழி ஆகியவை எனக்கு முக்கியமானவை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்