கிரிக்கெட்டிலும் இட ஒதுக்கீடு வேண்டும்- பிரபல நடிகர்

புதன், 7 டிசம்பர் 2022 (15:50 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவேண்டும் என்று பிரபல  கன்னட நடிகரும் சமூக ஆர்வலருமான  சேத்தன் குமார் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிள்ளதாவது:

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போது இடம்பிடித்த வீரர்களில் 70% பேர் உயர்சாதிப்பிரிவினர் உள்ளனர்.


ALSO READ: இந்த நாளில் அன்று : கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஹாட் ட்ரிக் எடுத்து சேத்தன் சர்மா உலக சாதனை

இந்தியாவில், கல்வி, அரசியல், பணி போன்றவற்றியில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதுபோல் கிரிக்கெட்டிலும், இட  ஒதுக்கீடுமுறை பின்பற்ற வேண்டும் என்று, பட்டியலினம் மற்றும் பழங்குடியின வகுப்புகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டால் வீரர்கள் சிறப்பாக விளையாடுவர் என்றும், கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணியில் இட ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

 Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்