ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்கங்கள்! தற்போதைய நிலை இதுதான்?

வியாழன், 16 ஏப்ரல் 2020 (11:51 IST)
ஊரடங்கால் திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் இருக்கைகளை எலிகள் நாசம் செய்யும் சூழல் உருவாகியுள்ளது.

ஊரடங்குக்கு முன்னதாகவே மார்ச் 19 ஆம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன. இப்போது வரை 27 நாட்கள் ஆகியுள்ள நிலையில் மேலும் 20 நாட்களுக்கு திரையரங்கங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள சில மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் உள்ள இருக்கைகளை எலிகள் கடித்து நாசமாக்கியுள்ளதாக செய்திகள்  வெளியாகியுள்ளன. இதனால் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் மேலும் சில வாரங்களுக்கு திரையரங்குகளை சரிசெய்யும் பணிகளால் தியேட்டர்கள் பய்ன்பாட்டுக்கு வர இயலாது என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்