நிர்வாணப் புகைப்பட சர்ச்சை…. வாக்குமூலம் அளித்த ரண்வீர் சிங்!

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (11:02 IST)
நடிகர் ரண்வீர் சிங் சமீபத்தில் வெளியிட்ட நிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ரண்வீர் சிங். சக பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனை சமீபத்தில் இவர் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் வெளியான 83 படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் வேடத்தை ஏற்று நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த போஸுக்காக கவனத்தைப் பெற்றார். பேப்பர் என்ற அந்த ஊடகத்துக்காக ரண்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தா. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் எழுந்தன. அவர் மேல் ஆபாசமாக நடந்துகொண்டதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நேற்று அவர் மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்