திருஷ்யம் 2 படத்தில் இணைந்த பாகுபலி நடிகர்!

ஞாயிறு, 7 மார்ச் 2021 (15:35 IST)
பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ராணா இப்போது திருஷ்யம் 2 படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிகக உள்ளார்.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளை உடனே தொடங்கியுள்ளார் இயக்குனர். இதையடுத்து இன்று அந்த படத்தின் பூஜை தொடங்கியுள்ளது. மேலும் படப்பிடிப்பு மார்ச் 5 ஆம் தேதி முதல் நடக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் ராணா ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மலையாளத்தில் முரளி கோபி நடித்த வேடத்தில்தான் ராணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்