ரம்யா பாண்டியன் கண்ணில் அறுவை சிகிச்சை! ஏன் தெரியுமா?

புதன், 5 மே 2021 (10:44 IST)
நடிகை ரம்யா பாண்டியன் கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.

இந்நிலையில் இப்போது ரம்யா பாண்டியன் கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளாராம். இவ்வளவு சின்ன வயதில் அவருக்கு கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்