நடிகர் அஜித் ஒரு படத்திற்குக் கால்ஷீட் கொடுத்தால், பல முன்னணி நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கும் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, 'குட் பேட் அக்லி' என்ற வெற்றி படத்திற்கு பிறகு அஜித்தின் மார்க்கெட் மேலும் உயர்ந்துள்ளது. ஆனால், இந்த சூழலில், அஜித் படத்தை தயாரிக்க ஆள் இல்லை என்றும், அவருடைய படத்தை தயாரிக்க ஐந்து முன்னணி நிறுவனங்கள் மறுத்துவிட்டதாகவும், தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
ஆனால், உண்மையில் அஜித் படத்தை தயாரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாகவும், இந்த நபர்கள் கூறுவது முழுக்க முழுக்க பொய் என்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த இரண்டில் எது உண்மை என்பது இன்னும் தெரியவில்லை. அஜித் மற்றும் ஆகிக் மீண்டும் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே, யார் சொல்வது உண்மை என்பது தெளிவாகத் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.