ஜிப்சிக்குப் பின் ராஜு முருகனின் அடுத்த பட அறிவிப்பு… கதாநாயகன் இவரா?

திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:00 IST)
இயக்குனர் ராஜு முருகன் கடைசியாக இயக்கிய ஜிப்சி திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.  இவர் கடைசியாக நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.

இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். வித்தியாசமான கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளது. ராஜு முருகன் விஜய்யின் 66 ஆவது படத்துக்கான வசனத்தை எழுதும் பொறுப்பையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்