சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா!

புதன், 8 செப்டம்பர் 2021 (10:31 IST)
இன்று நேற்று நாளை மற்றும் அயலான் ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொலல்ப்படுகிறது.

தமிழில் வெளிவந்த முதல் டைம் டிராவல் படமான இன்று நேற்று நாளை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனால் அந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கவனம் பெற்று சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ரவிக்குமார் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறாராம். இந்த படம் ஒரு குறுகிய கால படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்