ரஜினியின் அடுத்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர் இவர்தான்!

வெள்ளி, 28 அக்டோபர் 2022 (18:13 IST)
ரஜினியின் அடுத்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர் இவர்தான்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த இரண்டு படங்களை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என்று செய்திகள் கசிந்தது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்களை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.
 
இந்த இரண்டு படங்களின் பூஜை வரும் நவம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரஜினியுடன் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் துணை தலைவர் பிரேம் பெரியசாமி மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் தமிழ்குமரன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ஒரு படத்தை  சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்றும் இன்னொரு படத்தை மணிரத்னம் அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்