முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு… அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

vinoth

புதன், 24 ஜூலை 2024 (15:04 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், பஹத் பாசில், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்கள் சிலரும் படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் பஹத் பாசிலும் ஒருவராக இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இப்போது வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ரஜினியோடு மற்ற முன்னணி நடிகர்களும் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்