ரஜினி பட வில்லன் நடிகர் ரூ.1 கோடி கொரோனா நிதி

செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (16:49 IST)
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
 
இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
 
இருப்பினும் இந்தியாவில், சாதாரண மக்கள் முதல் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
கொரோனா இரண்டாம் அலையினால், மக்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு உயுரிழப்பு ஏற்பட்ட நிலையில்,. உச்சநீதிமன்றம் மற்றும் மாநில நீதிமன்றங்கள் தலையிட்டு இதில் மக்களின் நலம் காக்க நடவடிக்கை எடுத்துவருகிறது.
 
இந்நிலையில், ஷங்கரின் 2-0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்‌ஷய்குமார். இவர் முன்னாள் கிரிகெட் வீரரும் பாஜக எம்பியுமான காம்பிர் நடத்திவரும் தொண்டு நிறுவனத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.1 கோடி நிவாரணமாகக் கொடுத்துள்ளார். இதற்கு கம்பீர் நன்றி தெரிவித்துள்ளார்.
 
மேலும், அக்‌ஷய்குமார்  சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்