கடைசி கட்ட படப்பிடிப்பை தொடங்கும் ராதே ஷ்யாம் படக்குழு!

சனி, 26 ஜூன் 2021 (15:56 IST)
நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டெ நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

சாஹோ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் ராதே ஷ்யாம்.. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த பிரம்மாண்டமான படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் படம் என சொல்லப்பட்டது. ஆனாலும் பிரபாஸின் சம்பளம் எல்லாம் சேர்த்து மொத்தமாக 300 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதமிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஆந்திராவில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்