திரைப்பட கருத்துகளை தியேட்டரிலேயே விட்டுவிட்டு வரவேண்டும்… ராதாரவி பேச்சு!

புதன், 24 நவம்பர் 2021 (11:11 IST)
ஆண்டி இந்தியன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதாரவி ஜெய்பீம் சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.

ப்ளூ சட்ட மாறன் இயக்கியுள்ள ஆண்டி இந்தியன் திரைப்படம் பல்வேறு தடங்கல்களுக்குப் பதில் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் மூத்த நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் ஜெய்பீம் படம் குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ‘திரைப்படங்களின் கருத்துகளை திரையரங்குகளிலேயே விட்டுவிட்டு வரவேண்டும். தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் படத்தை போல ஆண்டி இந்தியன் படமும் பரபரப்பாக பேசப்படும். இந்த படத்திலும் பல சர்ச்சைகள் இருந்தாலும், இயக்குனர் அதை சிறப்பாக கையாண்டிருக்கிறார்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்