நடிகர் யோகி பாபு மீது புகார் !...

புதன், 26 பிப்ரவரி 2020 (21:25 IST)
நடிகர் யோகி பாபு மீது புகார் !...

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை  நடிகர் யோகிபாபு, மணி என்ற படத்திற்கு டப்பிங் பேச மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
யோகிபாபு மணி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிஷோர் என்பவர் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில், யோகிபாபு டப்பிங்  பேச மறுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 
 
மேலும், அரண்மனை -3  படப்பிடிப்பில் யோகிபாபு இருப்பதால், அடுத்தமாதம் 9 ஆம் தேதி யோகிபாபு சென்னை வரவுள்ளதாகவும், அப்போது மணி படத்திற்கான டப்பிங்கை முடித்துக் கொடுக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்