கோவையில் கட்டுப்பாடுகள் தளர்வு: முதல்வருக்கு நன்றி கூறிய தயாரிப்பாளர் சங்கம்!

வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (14:15 IST)
கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகள் திறக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்த நிலையில் அந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இணைந்த ஒருங்கிணைந்த கூட்டுக் குழுவின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. அந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்ட உள்ளதை அடுத்து நன்றி தெரிவிக்கப்பட்ட்டு, துகுறித்து வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
தமிழத்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளகள்‌ நலன்‌ கருதி தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கமும்‌, தமிழ்‌ திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கமும்‌ இணைந்து “ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள்‌ கூட்டுக்குழு" கடந்த 17ஆம் தேதி அன்று கலந்தாய்வு கூட்டம்‌ நடத்தியது. அதில்‌, பல முக்கிய தீர்மானங்கள்‌ எடுக்கப்பட்டது. குறிப்பாக, தயாரிப்பாளர்கள்‌ மற்றும்‌ விநியோகஸ்தர்கள்‌, திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கபபாத வண்ணம்‌, கோவை மாநகரில்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ மூடி இருக்கும்‌ திரையரங்குகள்‌ திறக்க வேண்டும்‌ என்று மாண்புமிகு தமிழக முதல்‌வர் அவர்களிடத்தில்‌ ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள்‌ கூட்டுக்குழு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
 
எங்களது. கோரிக்கையை கனிவுடன்‌ ஏற்று, தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து தற்போது. கோவை மாநகரில்‌ உள்ள கட்டுபாடுகளை நீக்கி ஞாயிற்றுக்கிழமைகளில்‌ திரையரங்குகளை திறந்துகொள்ளலாம்‌ என்ற அரசாணை வெளியிட்டுருப்பது தமிழ்த்‌ திரையுலகினருக்கு பெரும்‌ மகிழ்ச்சியை ஏறபடுததியுள்ளது/ 
 
அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களுக்கும்‌, தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க உறுப்பினரும்‌, சேப்பாக்கம்‌ திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின்‌ அவர்களுக்கும்‌, அரசாணை வெளியிட உறுதுணையாக இருந்த தமிழக அரசு அதிகாரிகளுக்கும்‌, தமிழ்த்‌ திரையுலகினரின்‌ சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்