பிரபாஸுக்கு வில்லனாகும் பிருத்விராஜ்… சலார் படத்தின் புதிய அப்டேட்!

சனி, 23 அக்டோபர் 2021 (10:35 IST)
பிருத்விராஜை சலார் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.  சூப்பர் ஸ்டார் அளவுக்கு அளவு இமேஜும் ஏகத்தும் அதிகரித்துள்ளது. அதனால் அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படம் என்ன என்ன என்று சினிமாத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இதையடுத்து கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் ராஜமன்னார் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகரான பிருத்விராஜிடம் அனுகியுள்ளார்களாம். கதாநாயகனாக நடிக்கும் அவர் வில்லனாக நடித்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகும் என்றும் மலையாளத்தில் நல்ல தொகைக்கு படத்தை விற்கலாம் என்றும் இந்த முயற்சியை மேற்கொள்கிறார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்