செம்பி படத்துக்கு கூடுதல் திரைகள்… பிரபு சாலமன் மகிழ்ச்சி!

புதன், 4 ஜனவரி 2023 (09:56 IST)
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான செம்பி திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸான படங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்தன. இதையடுத்து அவர் இயக்கிய செம்பி திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ஆனாலும் நேற்று ரிலீஸான நான்கு படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக செம்பிதான் அமைந்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் 50 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்த நாட்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இந்த படத்துக்கு சில இடங்களில் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள இயக்குனர் பிரபு சாலமன் அடுத்து கும்கி 2 படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்