பிரபுதேவாவைக் காக்க வைத்த சல்மான் கான்… மகிழ்ச்சியில் தமிழ் தயாரிப்பாளர்கள்!

சனி, 19 செப்டம்பர் 2020 (19:02 IST)
சல்மான் கான் படத்தை இயக்கி வந்த பிரபுதேவா, இப்போது தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

பிரபுதேவா பாலிவுட்டில் மிகவும் பிஸியான இயக்குனர். அடுத்தடுத்து சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் கொரோனா காரணமாக சல்மான் கான் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மறுத்துள்ளாராம்.

அதனால் காத்திருந்து காத்திருந்து பார்த்த பிரபுதேவா சலிப்பாகி, இப்போது தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். மேலும் தான் டப்பிங் பேசவேண்டிய படங்களுக்கான பணிகளையும் செய்ய ஆரம்பித்தார். இதனால் நீண்ட நாட்களாக பிரபுதேவாவுக்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாகியுள்ளனர். இதை இணைய சினிமா செய்தி சேனலான வலைப்பேச்சு நண்பர்கள் உறுதி செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்