பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் உறுதியா?... விக்ரம்மைப் பார்த்து கேட்ட மணிரத்னம்!

வியாழன், 20 ஏப்ரல் 2023 (07:56 IST)
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிலையில் படம் ரிலீஸாக இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில் இப்போது ப்ரமோஷன்கள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விக்ரம் “பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் உருவாகும். அதில் ஆதித்த கரிகாலனின் வாழ்க்கையைப் படமாக எடுப்பார்கள். அதில் நான்தான் ஹீரோ.” எனக் கூறினார். அப்போது இடைமரித்த மணிரத்னம் “அது உறுதியாகிவிட்டதா” என ஜாலியாக சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்