பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு திடீர் ரத்து!

திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:45 IST)
பொள்ளாச்சியில் இன்று தொடங்க இருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை இயக்குனர் மணிரத்னம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ஒருசில காட்சிகளை படமாக்க இன்று பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால் அதை திடீரென ரத்து செய்துள்ளார் இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிரத்னம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்