பொன்னியின் செல்வன்.. விக்ரம்மோடு ஜெய்ப்பூர் செல்லும் மணிரத்னம்!

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:55 IST)
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் செல்ல இள்ளாராம்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

இந்நிலையில் ஆதித்த கரிகாலனாக நடிக்கும் விக்ரம் போரில் வெற்றி பெற்றும் பாடல் ஒன்றை படமாக்க ஜெய்ப்பூருக்கு மார்ச் இரண்டாவது மாதத்தில் படக்குழுவினரோடு கிளம்ப உள்ளாராம் மணிரத்னம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்