நயன்தாரா -விக்னேஷ் சிவன் மீது போலீசில் புகார்

சனி, 15 அக்டோபர் 2022 (19:48 IST)
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்  ஒருவர் புகார் அளித்துளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன் தாரா. இவருக்கும் இவரது காதலர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம்  திருமணம் நடந்தது.

அதன்பின்னர்,  நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இருமுறை தேனிலவுக்காக வெளிநாடு சென்றனர். இவர்கள் திருமணத்தின் போது,  எடுக்கப்பட்ட வீடியோ பல கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

தற்போதும் விக்னேஷ் சிவன், அஜித்குமாரின் அஜித்62 படத்தை இயக்குவதில் பிஸிஸாக உள்ளார். இந்த நிலையில்  திருமணமாகி 4 மாதங்களில் இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக இருவரும் தெரிவித்தனர்.

இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

ALSO READ: நயன்தாரா குழந்தைகளின் வாடகை தாய் துபாயில் இருக்கிறாரா?
 
இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தையைப்பெற்றெடுக்க அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படு வருகிறது.

இந்த  நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர், இளைஞர் சமூதாயத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதால் இவர்கள் மீது  தம்பதியர் மீது   நடடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில்  வழக்கறிஞர்  ஒருவர் புகார் அளித்துளார்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்